Monday, December 29, 2014

ஆரண்யம், வனம் போன்ற சமஸ்கிருதச் சொற்கள், காடு என்கிற தமிழ்ச் சொல்லுக்கு இணையாக தமிழ்மொழியில் கலந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன..வனவாசம் என்கிற சொல்லை தண்டனைக்குரிய விஷயமாக நாம் கருத ஆரம்பித்தும் நூற்றாண்டுகள் கடந்து விட்டன..நிஜமாகவே வனவாசம் தண்டனையா...?

இயற்கையோடு இணைந்த வாழ்வு எத்தனை பேருக்கு வாய்க்கும்..? காட்டில் மரத்தடியினில் உறங்கி, காய், கனிகளை உண்டு, அருவியிலும், இன்னபிற ஓடைகளிலும் குள...ித்து, விலங்குகளையும், பறவைகளையும் தோழமையோடு நேசித்து கானக வாழ்க்கை வாழ்வது நம் போன்ற நாட்டுவாசிக்குச் சாத்தியமேயில்லை..எத்துணை பணவசதி படைத்திருந்தாலும் இந்த சந்தோஷத்தை நாம் விலை கொடுத்து வாங்க முடியாது..காரணம் இதுதான் நிஜமான சந்தோஷம்..! பணத்தினால் போலியான மகிழ்ச்சியை வேண்டுமானால் விலை கொடுத்து வாங்கலாம்.

நூறாண்டுக்கு முன்பிருந்த வனப்பகுதி இப்போது நம்மிடத்தேயில்லை...கால் சதவீதம் கூட இல்லையென்றே சொல்லலாம்..காட்டை அழித்து வீடாக்கிக் கொண்டிருக்கிறோம்..வனம் அழிவதால் நீர் வளம் அழிகிறது..ஆறுகளின் திசைகள் மாறிப்போகின்றன..வெப்பமயமாதல் அதிகரிக்கிறது..மழையளவு குறைகிறது..வருடாவருடம் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது..பறவைகளின் நடமாட்டம் குறைகிறது..சென்னையில் ஒரு குருவிகூட கிடையாது..இங்கே காக்கா பிடிப்பவர்களின் கூட்டம் அதிகம் என்பதால், காகங்களும் கூட்டங்கூட்டமாக பறந்து திரிகின்றன...! வலையப்பேட்டை பாட்டி வீட்டுக்கிணத்தடியில் ஒரு கைப்பிடி அரிசியைத் தூவினால் எங்கிருந்தோ திடுமென்று பத்துப்பதினைந்து பறவைகள் வந்துவிடும்...விதவிதமான நிறங்களில்...பெயர் தெரியாத இந்தப் பறவைகளைப் பார்ப்பதற்காகவே நான் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன் என்று அவைகளிடம் சொல்லவேண்டுமென்று எனக்குத் தோன்றும்...!

இராமனை வனவாசம் போகச் சொன்னபோது அவனுக்கு அத்தனை சந்தோஷமாம்..வனவாசத்தின் போது முனிவர்களையும், யோகிகளையும் சந்திக்கலாம்...நம் வாழ்வைச் செம்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தானாம்..

அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும்
பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன்
துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும்

ஆரண்ய காண்டம்...விராதன் வதைப் படலம்.

இராமனும், இலக்குவனும் பெருமையுடைய அத்திரி முனிவனுடன் தங்கியிருந்தனர்...மறுநாள் அத்திரி முனிவனின் அரிய பத்தினியான அனசூயையின் கட்டளைப்படி அளிக்கப்பட்ட அழகிய அணிகலன்கள், பொருந்திய ஆடைகள், சந்தனம் ஆகியவற்றைத் தரித்த ஜனகன் மகள் சீதையுடன், அவர்களிருவரும் புறப்பட்டுச் சென்று தண்டக வனத்தில் புகுந்தனர்...

செடி,கொடிகளை வளர்த்து, அவைகளிலிருந்து மலர்ந்து மணம் வீசும் மலர்களைப் பார்த்துப் புன்னகைக்கலாம்...மரம் நட்டு, அதன் கீழ் அக்கடாவென்று இளைப்பாறலாம்...நம் வீட்டுத்தோட்டத்தில் காய்த்த வெண்டையை அப்படியே பச்சையாகக் கடித்துச் சாப்பிடலாம்..நினைக்க நினைக்க எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது...?!

எம் பாட்டன், முப்பாட்டன் வைத்த மரத்தின் நிழலை நான் அனுபவிக்கிறேன்..என் பேரன், கொள்ளுப்பேரன் அனுபவிக்க எந்த மரத்தின் மிச்சத்தை வைத்துவிட்டுப் போகப்போகிறேன்..? நாம் யோசிக்க வேண்டிய தருணம் இது..

ஆளுக்கொரு மரம் நடுவோம்...நாள்தோறும் மனிதம் வளர்ப்போம்...:) :)
See More
 
 
 
 
.
 
பாதம் என்பதற்கு முழுமையான அர்த்தம் தாங்குதல் என்று எடுத்துக் கொள்ளலாம்...இந்த மனித உடம்பைத் தாங்குவது பாதம்தானே..பாதத்தில் அடிபட்டுவிட்டால், வலியைப் பொறுத்துக் கொள்வது கஷ்டமாக இருக்கிறது..எந்தளவுக்கு மென்மையான பாதமோ, அந்தளவுக்கு உறுதியாகவும் இருக்க வேண்டும்..பாதங்களைச் சரியான முறையில் பராமரிக்க வேண்டும்..

வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவர் வேதாந்த தேசிகர்..அவர் “பாதுகா சஹஸ்ரம்” என்றொரு மிக அர...ுமையான நூலை சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கிறார்..
ஸ்ரீமன் நராயணனின் பாதம் பணிந்து சரணாகதி அடைவதற்கான வழிகள் அந்த நூலில் கூறப்பட்டிருக்கின்றன.

தில்லையில் ஆடல்வல்லான் இடது பதம் தூக்கி ஆடும் நிலை..அவனருளாலே அவன் தாள் பணிந்து என்கிற தத்துவத்தைக் குறிக்கிறது..இறைவனின் தாண்டவம்
என்கிற தாத்பரியமே தீமைகளை சம்ஹாரம் செய்வதுதான்.
அதற்குத் திருவடிகளை உவமையாகக் கூறுவது மரபு.

தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்த சித்தூர் மாவட்டத்தில், சுருட்டப்பள்ளி என்கிற ஊரில் எம்பெருமான் சர்வேஸ்வரன்
பள்ளி கொண்டீஸ்வரனாக அருள் பாலிக்கிறார்..நாங்கள் அந்த ஆலயத்திற்குச் சென்றிருந்தபோது, சிவாச்சாரியார் தீர்த்தம் கொடுத்தார்..” பெருமாள் கோவில் மாதிரி தீர்த்தம் கொடுக்கிறீர்களே..” என்று நான் கேட்டேன்..”எம்பெருமானுக்கு இந்த ஸ்தலத்தில் பாத தரிசனம் உண்டு..அதனால்தான் இந்த தீர்த்தம்..” என்றார்..
ஆதியும், அந்தமுமில்லாத அருட்பெருஞ்சோதிக்குப் பாத தரிசனம்.. ஸ்ரீ மஹா பெரியவா இந்த ஆலயத்துக்கு வரும்போதெல்லாம், கருவறையில் தனியாக நின்றுகொண்டு
எம்பெருமானிடம் பேசிக்கொண்டிருப்பாராம்..சிவாச்சாரியார் என்னிடம் சொன்னபோது எனக்கு மயிர்க்கூச்செறிந்தது..
குடந்தையில் கிடந்தவாறு வீற்றிருக்கும் ஆராவமுதனிடம், திருமழிசை ஆழ்வார் பேசியது நினைவுக்கு வந்தது..ஆழ்வார்கள் பற்றி எழுதும்போது இந்தச் சம்பவத்தை விரிவாக எழுதுகிறேன்..

கருவறையில், அன்னை உமையவள் மடியில் ஆலகால விஷத்தை அருந்திய களைப்பில் எம்பெருமான் கிடந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்..சுற்றிலும் இந்திராதி தேவர்கள் இருக்கிறார்கள்..கருவறையை விட்டு வெளியே வருவதற்கு மனமே வராது..

தோழிகள்/நண்பர்கள் அவசியம் இந்தக் காட்சியைக் கண்டு இன்புறவேண்டும்..சென்னையில் இருந்து இரண்டு மணிநேர கார் பயணம்..திருவள்ளூர்( பண்டைய பெயர் திரு எவ்வளூர் )
தாண்டி இந்த சுருட்டப்பள்ளி இருக்கிறது..

கம்பனின் இராமகாதையில் திருவடி முக்கியக் கதாபாத்திரமாக இடம் பெறுகிறது..சித்திரக்கூடத்தில் இருக்கும் இராமனைத் தேடி வந்து, அயோத்திக்கு அரசனாக முடிசூட்டிக் கொள்ளும்படி பரதன் வேண்டுகிறான்..ஒருபோதும் தர்மத்தின் நிலையிலிருந்து தன்னால் தாழமுடியாது என்று கூறி பரதனின் வேண்டுகோளை இராமன் நிராகரிக்கிறான்..இராமனின் பாதுகைகளைப் பெற்றுக்கொண்டு அளவிட முடியாத சோகத்தோடு பரதன் அயோத்தி திரும்புகிறான்..பதினான்கு
வருடங்கள் இராமனின் திருவடிகள்தான் அரியணையில் அமர்ந்திருந்தது என்பது வரலாற்றின் ஆச்சரியமான நிகழ்வு..

விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான்
செம்மையின் திருவடித்தலம் தந்தீக என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.

அயோத்தியா காண்டம்...திருவடி சூட்டு படலம்.

இனி செய்யவேண்டியது வேறொன்றுமில்லை..இராமனைப் பிரிந்து அயோத்தியில் அரசாட்சி செய்வது என்பது அத்துணை எளிய செயல் அன்று..என்று பெரிதும் மனம்
வருந்தி, “ எனக்கு உனது பாதுகைகளை இனிமையுடன் தந்தருள்க..”என்று இராமனிடம் வேண்டிக் கொண்டான் பரதன்.இராமனும் தனது பாதுகைகளை அவனிடம் அளித்தான்.

அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான்
முடித்தலம் இவை என முறையின் சூடினான்
படித்தலத்து இறைஞ்சினான் பரதன் போயினான்
பொடித்தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான்..

அயோத்தியா காண்டம்..திருவடி சூட்டு படலம்.

அழுத கண்களையுடைய பரதன், அந்தப் பாதுகைகள் இரண்டையும் தனது கிரீடங்களாகத் தலையில் சூடிக் கொண்டான். இராமனது திருவடியில் வீழ்ந்து வணங்கி அயோத்தி திரும்பினான்..

பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வது நம்முடைய பண்பாடு..அதுவும் கூட நெடுஞ்சாண்கிடையாக
ஒருவரை விழுந்து வணங்குகிறோமென்றால், அந்த நமஸ்காரத்தை ஏற்றுகொள்கிற தகுதி அவர்களுக்கு இருக்க வேண்டும்..!

இன்றைய சூழலில் அரசியல்வா(வியா)திகளின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்வதைத் தடுக்க ஏதேனும் சட்டம் கொண்டுவந்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும்..:) :)
See More
 
 
 
 
சகோதரப்பாசம் பற்றி அவசியம் நான் எழுதியாக வேண்டும்.
எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையே இருக்கும் அன்பு; அண்ணாவுக்கும், தம்பிக்குமிடையே இருக்கும் ஆழ்ந்த நட்பு; என் அம்மாவுக்கும், மாமாக்களுக்குமிடையே இருக்கின்ற புரிதல்; என் தந்தைக்கும், அவரது சகோதரர்களுக்குமிடையே
இருந்த மரியாதை...இப்படி என் வாழ்நாளில் நான் ரசித்த. ரசிக்கும் சகோதரப்பாசத்தைப் பற்றி எழுதுவதில் எனக்கு எப்போதுமே மகிழ்ச்சிதான்...

இந்த நிம...ிஷம் வரை எனக்கு மிகப்பெரிய பலமாக
இருப்பவர்கள் என் சகோதரர்கள்தான்..அண்ணன் தம்பிக்கு
நடுவில் நான் இராணி போல வளர்க்கப்பட்டேன் என்பதுதான்
நிஜம்...என் தோழிகள் அடிக்கடி சொல்வார்கள்..” நீ மிகவும் கொடுத்து வைத்தவள்” என்று...இறை எங்கள் குடும்பத்துக்கு அளித்த கொடை என்றுதான் சொல்லவேண்டும்...
சகோதரர்கள் மட்டுமல்ல...சகோதரர்களின் மனைவிகளும்
மிகவும் பிரியமாக இருப்பார்கள்...இதுவும் எம்பெருமான்
அளித்த வரமே...! மாமாக்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.
எங்கள் எல்லோருக்குமே friend, philosopher, guide மாமாக்கள்தான்..
மாமிகள் எங்களை அப்படிக் கொண்டாடுவார்கள்..
என் அம்மாவுக்கும், மாமிகளுக்குமிடையேயான பாசத்தைச்
சிறுவயதிலிருந்து பார்த்து, ரசித்து வருகிறேன்...
இதெல்லாம் கொடுப்பினை அல்லாமல் வேறென்ன...!

இலக்கியங்களிலும் சகோதரப்பாசத்துக்கென்று தனியிடம்
உண்டு..இராமாயணத்திலும், மகாபாரதத்திலும்
சகோதரப்பாசம் தான் பிரதானமாக இருக்கிறது...தன்
சகோதரனுக்காக, அரசுரிமையைத் துறந்து சமணத்
துறவியானவர் இளங்கோவடிகள்...

சுற்றம் தழால் அதிகாரத்தில் உறவினர்களிடையே
நல்லுறவு பேணுவதன் அவசியத்தைப் பத்து பாடல்களில்
வலியுறுத்துகிறான் வள்ளுவன்..

“விருப்பு அறாச் சுற்றம் இயையின்
அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும்...”

அன்பு அழியாத நல்ல சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் அஃது அவனுக்குக் குறைவில்லாத செல்வங்கள் பலவற்றையும் தரும்..

இராமகாதையில் சகோதரப்பாசத்துக்குத்தான் முக்கிய இடம்...இப்படிப்பட்ட சகோதரர்கள் நமக்கில்லையே
என்று எல்லோரையும் ஏங்க வைக்கும்படியான
பாத்திரப் படைப்பு...

என்று சிந்தித்து இளையவற் பார்த்து இரு
குன்று போலக் குவலிய தோளினாய்
என்று கற்றனை நீ இது போல் என்றான்
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்.

அயோத்தியா காண்டம்..சித்திரக்கூடப் படலம்...

என் தம்பி எந்தத் துணையுமில்லாமல் எத்தனை அழகாக
இந்தக் குடிலை அமைத்திருக்கிறான் என்று மனதிலே நினைத்த இராமன், இலக்குவனைப் பார்த்து, “ இரண்டு மலைகளைப் போன்ற தோள்களைப் பெற்றவனே..இவ்வளவு சிறப்பாகக் குடிலை அமைக்கும் தொழிலை
நீ எங்கு கற்றாய்..?!..” என்று கூறி தாமரைமலர் போலும்
தன் இரு கண்களில் கண்ணீரைச் சொரிந்தான்..

இதே இராமகாதையில்தான் சகோதரனுக்காக உயிர்
துறக்கும் கும்பகர்ணனும், மகாபாரதத்தில்
சகோதரனுக்காக உயிர் விடும் துச்சாதனனும் இதிகாசக்
காப்பியங்களில் மறக்க முடியாத கதாப்பாத்திரங்கள்...

இன்றையக் காலக்கட்டத்தில் அரசியல் மற்றும் தொழில்
துறைகளில் சகோதரர்கள் கோலோச்சிக் கொண்டு
இருக்கிறார்கள் என்றாலும் அவர்களுக்கிடையேயான
ஸ்னேகம் நீரு பூத்த நெருப்பாகத்தானிருக்கிறது..
காரணம்.. இது கலியுகம்...:)

.
See More


 
 
.

நதி என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஓர் அம்சம்.
நதி இல்லையென்றால் நாம் நாதியற்றுப் போய்விடுவோம்.
நீரின்றி அமையாது உலகு..மானுடமே நீரின் போக்கில்தான்
தம் வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறது..தீப கற்பத்தில்
நாம் வாழ்கிறோம் என்றாலும் கடல் நீரை அள்ளிப் பருகிட
முடியாது..
...
நதியில் ஓடும் நன்னீரை நம்பித்தான் விவசாயம் இருக்கிறது.
பயிர்களுக்கும், நீர் பருகும் மானிட உயிர்களுக்கும்
நதிநீர் அவசியமாகிறது..

சிந்துநதிக் கரையில் தோன்றிய சிந்துசமவெளி நாகரிகம்,
காவிரிக்கரையில் தோன்றிய திராவிட நாகரிகம், கங்கைக்
கரையில் தோன்றிய ஆரிய நாகரிகம், நைல்நதிக் கரையில்
தோன்றிய எகிப்து நாகரிகம், யூப்ரடீஸ், டைக்ரிஸ்
நதிக்கரையில் தோன்றிய பாபிலோனிய நாகரிகம்...என்று
வரலாற்றில் பேசப்படும் புகழ்பெற்ற நாகரிகங்கள்
அனைத்துமே நதிக்கரையில் தோன்றியவைதான்...

கடற்கோளால் கபளீகரம் செய்யப்பட்ட குமரிக்கண்டத்தின்
பஃறுளி ஆற்றங்கரையில் அமைந்த கபாடபுரத்தில்தான்
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் பண்டைய
தமிழ் மன்னர்கள்...நதியோடு தங்கள் வாழ்வை அமைத்துக்
கொண்டதனால்தான் சீரும், சிறப்புமாக
வாழ்ந்தார்கள் தமிழர்கள்...

“நடந்தாய் வாழி காவேரி...நாடெங்குமே செழிக்க..
நன்மையெல்லாம் சிறக்க...:அமரர் சீர்காழி கோவிந்தராஜன்
அகத்தியர் படத்தில் பாடியிருக்கும் பாட்டு நதியின்
மேன்மையை நமக்கு உணர்த்தும்..

இராமகாதையில் நதிகளுக்குச் சிறப்பான இடம் உண்டு.
கங்கை, யமுனை, சரயூ, கோதாவரி, பம்பை..ஆகிய
ஆறுகளைப் பிரமாதமாக வர்ணித்துப் பாடல்கள்
புனைந்திருக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார்
ஊரும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார்
ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன்....

அயோத்தியா காண்டம்...வனம் புகு படலம்.

யமுனை ஆற்றை அடைந்தனர்..அதன் பெருமை அறிந்து
வணங்கினர்...ஆழ்ந்த நீரில் மூழ்கி நீராடினர்..கிழங்குகளையும், கனிகளையும் உண்டு
யமுனை நீரைப் பருகினர்..யமுனை ஆற்றை எவ்வாறு
கடந்து செல்வது என்று இராமன் வினவினான்..உடனே இலக்குவன் ஒரு தெப்பம் செய்து அவர்கள் இருவரையும்
அக்கரையில் கொண்டு சேர்த்தான்.

காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்டதோர்
வையை, பொருனை நதி என மேவிய ஆறு பலவோடத்
திருமேனி செழித்த தமிழ்நாடு...சமகால அரசியல்
சூழலில் நீருக்காக அண்டை மாநிலங்களோடு
போராடும் நிலையைப் பார்க்கும்போது
நெஞ்சு பொறுக்குதில்லையே...:)
See More
 
 
 
நட்புக்கென்று நம் வாழ்வில் பல பக்கங்களை ஒதுக்கியாகவேண்டும்..பிரியத்தை மழையாய்ப் பொழியச்செய்வது நட்பில்தான் சாத்தியம்..நட்புதான் காரம். மணம், குணத்தோடு எல்லைகளையும் தாண்டி நீடித்து நிற்கிறது..நட்புதான் மானுடத்தின் மேன்மையை உணரச்செய்கிறது..நல்ல நட்பு நம்மை நல்ல மனுஷியாக உருவாக்குகிறது..நட்பின் அருமை அறியாதவர்கள், நல்ல நண்பர்கள் அமையப் பெறாதவர்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்..

நட்புக்காக இருபது ...பாடல்களை ஒதுக்கியிருக்கிறான் வள்ளுவன்...

நிறைநீர நீரவர் கேண்மை; பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

அறிவுடையார் நட்பு பிறைச்சந்திரன் வளர்வது போல் நாள்தோறும் வளர்ந்து பெரும் பயன் தரும்..அறிவில்லாதவர்
நட்பு முழுநிலவு பின்னர்த் தேய்வது போல நாள்தோறும்
குறைந்து முடிவில் இல்லாது ஒழியும்.

என் வாழ்க்கையில் பள்ளி, கல்லூரிக் காலங்களிலும்; இப்போது மத்தியம காலத்திலும் தோழிகள் சூழ் உலகாகத்தான் நட்பு இருந்து வந்திருக்கிறது..தோழிகளும், நண்பர்களும்தான் நான் புத்துணர்வோடு எழுதுவதற்குக்
கிரியா ஊக்கிகள்..

கம்பனின் இராமகாதையில் நட்புக்கென்று பிரத்யேகப்
படலங்கள் இருக்கின்றன..கங்கைக்கரையில்
நாவாய் வேட்டுவன் என்கிற ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவனான வேடர் குலத்தவன் குகன் இராமனைச்
சந்தித்து, அவனோடு பழகி அவனுக்கு நண்பனாகிறான்.
இராமனை கங்கையின் மறுகரையில் கொண்டுச் சேர்க்கிறான்..இராமனைப் பிரிய மனமில்லாமல்
மனம் கலங்குகிறான்..

துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்..

அயோத்தியா காண்டம்...குகப் படலம்.

துன்பம் உள்ளதென்றால் சுகமும் உள்ளது. இப்போது இணைந்திருப்பதற்கும், வனவாசத்திற்குப் பின் இணந்திருக்கப்போவதற்கும் இடைப்பட்டதான பிரிவு என்னும் துன்பம் உள்ளதே என்று எண்ணாதே..உன்னைக் கண்டு தோழமைக் கொள்வதற்கு முன்னே உடன் பிறந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம். இப்போது உன்னோடு சேர்ந்து நாம் ஐவராகிவிட்டோம் என்றான் இராமன்...

நண்பனுக்காக, செஞ்சோற்றுக்கடன் கழித்து தன் உயிரையே
ஈந்தவன் கர்ணன்..துரியோதனனோடு சேர்ந்த கூடாநட்பு என்றாலும் அந்த நட்புக்கு வரலாற்றில் ஒரு சிறப்பான இடமிருக்கிறது..கண்ணனுக்கும், குசேலனுக்கும் இடையேயான நட்பு. சீஸருக்கும், மார்க் ஆண்டனிக்கும் இடையே இருந்த நட்பு..வாழவைத்த நட்பு, துரோகம் செய்த நட்பு என்று வரலாற்றின் பக்கங்கள் நட்பால்
நிரப்பப்பட்டிருக்கின்றன..:)
See More
 
:
 
 
 
 
 
ஐம்பெருங்காப்பியங்கள் முழுவதுமே சமண, பெளத்த
இலக்கியங்கள்தான்..சைவமும், வைணவமும் தமிழகத்தில்,
பண்டைக்காலத்தில் சிறப்புக் குன்றியிருந்தன..
மகேந்திரவர்மனுக்கு முன்னர் இருந்த பல்லவர் ஆட்சிக்
காலத்திலும், களப்பிரர் ஆட்சிக்காலத்திலும், சமண,
பெளத்த மதங்கள்தான் தழைத்தோங்கியிருந்தன..
...
சமணம் என்பது மருவி வழங்கப்படும் பெயர்..சரியான
பெயர் அமணம் என்பதாகும்..ஆடையணியாதவர்கள்
என்று பொருள்..சமணத்துறவிகளைத் திகம்பரச்சாமியார்கள்
என்று நம்மூரில் அழைப்பார்கள்..கும்பகோணத்தின்
அருகிலிருக்கும் அம்மன்குடி ( பண்டைய பெயர் அமண்குடி)
சமணர்கள் அதிகம் வாழ்ந்த ஓர் இடம்..

எந்த மதத்தைச் சார்ந்த இலக்கியமாக இருந்தாலும், கடவுள் வாழ்த்துப்பாக்கள் கண்டிப்பாக இருக்கும்..குறிப்பாக ..
சிலப்பதிகாரத்தில் “ஞாயிறு போற்றுதும், திங்கள்
போற்றுதும்..”போன்ற பாடல்கள் இயற்கை வாழ்த்துப்பாடல்கள்..

கம்பராமாயணத்தில் சூரியனையும், சந்திரனையும்
விதவிதமாக வர்ணிக்கிறான் கம்பன்..” வெய்யோன்,
வெயிலோன், செங்கதிர், பரிதி,ஞாயிறு, பகலவன்,
கதிரவன், மின்னொளிர்...என்றெல்லாம் பகல் வெளிச்சத்தையும்...” பூர்ண சங்திரன், வான்மதி, முழுமதி,
நிலவோன். வானம் கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள்...” என்று சந்திரனையும் பல பாடல்களில்
பாடுகிறான் கம்பன்..எத்தனை பாடல்களில் பாடியிருக்கிறான் என்பதை மட்டுமே ஆராய்ச்சி செய்து
முனைவர் பட்டம் வாங்கிவிடலாம்...! கம்பனின்
இராமகாதையில் சூரிய ஒளியும். சந்திர ஒளியும் ஒரு
கதாபாத்திரமாகவே வழிநெடுக வருகிறது

கம்பராமாயணத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம்
நான் இந்தப்பாடலைத்தான் மேற்கோள் காட்டுவேன்.
கம்பரசத்தில் என் மனதைப் பறி கொடுத்தது இந்தப்
பாடலைப் படித்த பிறகுதான்..!

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகுடையான்...

அயோத்தியா காண்டம்..கங்கைப்படலம்.

” இவனது திருமேனி மையைப் போன்றதோ..மரகதமணியைப்
போன்றதோ...அலை மடங்கும் கடலைப் போன்றதோ...
மழை வழங்கும் கருமேகம் போன்றதோ...என்ன
அற்புதமான வடிவம் இது...” என்று பாராட்டத்தக்க
இணையற்ற, அழியாத அழகையுடையவனான இராமன்
சூரியனது ஒளி தனது உடம்பிலிருந்து வரும் ஒளிக்குள்
ஒளிந்துகொள்ள, “இடை உண்டு” என்பது பொய்யோ
என்று எண்ணும்படியான நுண்ணிய இடையை உடைய
சீதையோடும், தம்பி இலக்குவனோடும் நடந்து போனான்...

வெயில் நம்மை எப்படிச் சுட்டெறித்தாலும், அதை நொந்து
கொண்டே நம் வாழ்க்கையை ஓட்டிவிடுகிறோம்..சூரிய சக்தி
நம்மீது படவில்லையென்றால் விட்டமின் டி குறைபாடு வந்துவிடும்..சூரிய நமஸ்காரத்தின் தாத்பரியமே அதுதான்.
நமக்குத் தெரியாதா என்ன...?!

அவனன்றி ஓர் அணுவும் அசைய முடியாதென்று...:) :)
See More
 
 
 
 
பிரிவு என்கிற விஷயத்தை, ஒரு பதிவில் சொல்லிவிடமுடியாது..ஆதலால் இன்றும் அதே தலைப்பை
எடுத்துக் கொள்கிறேன்...ஆனால் உள்ளர்த்தம் மாறுபடும்..
காதலர் பிரிவு என்கிற கோணத்தில் இன்றைய பதிவை
எழுதுகிறேன்..

சங்கநூல்கள் முதல் இன்றைய நவீனப் புதினங்கள் வரை, இந்தத் தலைப்பைப் பற்றி எழுதாதவர்களேயில்லை..
சங்கநூல்களில் எட்டுத்தொகை நூல்கள் முழுக்கவே...
காதல் பாடல்கள்தான்..விதவிதமான காதல்கள்..
விதவிதமான பிரிவுகள்...

திருக்குறளில், இன்பத்துப்பாலுக்கு 250 குறள்கள்
ஒதுக்கியிருக்கிறான் வள்ளுவன்..

இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல்; அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு..
அன்புள்ளதோழி இல்லாத ஊரில் வாழ்வது வருத்தமானது.
அன்புக் காதலரைப் பிரிந்து வாழ்வது அதைவிடத்
துயரமானது..

இராமன் மரவுரியைத் தரித்துக்கொண்டு, தன் தம்பி
இலக்குவனோடு கானகம் செல்லத் தயாராகிவிட்டான்..
தன் அன்னையான கோசலையிடம் விடை பெற்றுக்
கொண்டு, பின்பு மனைவியான சீதையிடம்
சொல்வதற்காக அவள் இருப்பிடம் வருகிறான்..
கவனியுங்கள்...எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்
மனைவிக்குக் கடைசியில்தான் தெரிகிறது..
( You too kamban...?! )..கம்பனின் இராமகாதையில்
பிரிவுத் துயரின் ஆகச் சிறந்த பாடலாக இந்தப்
பாடலைச் சொல்லலாம்...

பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்றாள்..

அயோத்தியா காண்டம்...நகர் நீங்கு படலம்.

” இரக்கம் இல்லாமல், கொஞ்சமும் பாசமில்லாமல்
என்னை விட்டுச் செல்ல நினைக்கிறாய்...உன் பிரிவினால்
ஏற்படும் வெப்பத்தின் முன்னே பிரளய காலத்து
நெருப்பும், சூரியனும் என்ன செய்ய முடியும்..? நீ
செல்லப் போகும் பெருங்காடு, உன்னைப் பிரிந்து
இருக்கும் துயரம் சுடுவதைக் காட்டிலும் அதிகமாகச்
சுடுமோ..?” என்றாள் சீதை..

கம்பராமாயணத்தில் நம் வாழ்வின் எல்லா
கேள்விகளுக்கும் விடை கிடைக்கின்றது..நாம் அதைச்
செயல்படுத்துகிறோமா என்பதுதான் கேள்விக்குறி..!

தமிழ்த் திரைப்படங்களில் காதல்பிரிவு பற்றிச்
சொல்லாத கதைகள் குறைவு...அரைத்த மாவையே
விதவிதமாக அரைப்பார்கள்..கிரைண்டரே இல்லாத
உலகுக்குச் சென்று விட வேண்டும் என்று தோன்றும்...:) :)
See More


8 June
 
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை...என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்...” பணம் படைத்தவன்
படத்தில் வரும் பாட்டு...
பிரிவு என்பது அத்தனை வலி தரக்கூடிய விஷயம்..
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் பிரிவு என்கிற உணர்வை அனுபவித்தேயாக வேண்டும்...!
...
பள்ளியிலும், கல்லூரியிலும் தோழிகளை விட்டுப் பிரிந்தது..
இன்னமும் நினைவேட்டின் பக்கங்களைத் திருப்பிப்
பார்க்கும்போதெல்லாம் ஆழமான பாதிப்பை
ஏற்படுத்துகிறது..கல்லூரி பிரிவு உபசாரவிழாவில்.
தோழிகள் மாய்ந்து, மாய்ந்து ஆட்டோக்ராப் புத்தகத்தில் எழுதினார்கள்..அப்படியெல்லாம் எழுதிய தோழிகள் பலர்
இப்போது எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை..
“பூக்களின் கனவில் புயல் வருகின்ற விபரீதம் இப்போதுதான் என் கண்களுக்குத் தெரிந்தது..” என்று தோழி ஸ்ரீமதி
எழுதியிருந்தாள்..நல்லவேளை அவளைக் கண்டுபிடித்துவிட்டேன்..கண்டுபிடித்துக் கொடுத்த
அருமைத்தோழி விமலாவுக்கு நன்றி...! திருமணம் என்பது
பெண்களுக்கு மனமாற்றம், உருமாற்றம்..என்று எல்லாம்
கலந்த ஒட்டுமொத்த மாற்றம்..திருமணத்திற்குப் பிறகு
கவிதை, இலக்கியம் என்று எதையும், யாருடனும்
பகிர்ந்து கொள்ளமுடியாமல் என் பெரும்பாலான
நேரங்களைப் புத்தகம் வாசிப்பதிலும், பத்திரிக்கைகளுக்கு
எழுதுவதிலும் கழித்திருக்கிறேன்..ஃபேஸ்புக் மூலம்
தோழிகளையெல்லாம் கண்டுபிடிக்க முடிந்ததுதான்
என் வாழ்வில் பெரிய திருப்புமுனை..இப்போதுதான்
என்னையே எனக்குப் பிடிக்கிறது...!
ஒரு சாதாரண மனுஷிக்கே பிரிவு இத்தனை வேதனை
கொடுக்கும் என்றால், நாடாளப்போகிற மன்னனுக்கு
எத்துணை வேதனை இருக்கும்...?!
அயோத்தி நாட்டு இளவரசன், முடிசூட்டிக் கொள்ளாமல்
வனவாசம் போகப்போகிறான் என்கிற செய்தியைக்
கேட்டவுடன் அந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல..பறப்பன...ஊர்வன,,செடியில் மலர்வன...என்று எல்லா ஜீவராசிகளும் அவன் பிரிவைப் பொறுக்க
மாட்டாது அழுகிறதாம்...உருகி உருகி எழுதி நம்மையும்
அந்தப் பிரிவுத்துயர் தொற்றிக் கொள்ளுமாறு
செய்துவிடுகிறான் கம்பன்..
ஆவும் அழுதன அதன் கன்று அழுத அன்று அலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும்
காவும் அழுத களிறு அழுத கால் வயப் போர்
மாவும் அழுத அம் மன்னவனை மானவே.
அயோத்தியா காண்டம்....நகர் நீங்கு படலம்.
அயோத்தி நகரத்துப் பசுக்கள் அழுதன; பசுங்கன்றுகள்
அழுதன; அன்று மலர்ந்த மலர்கள் அழுதன; நீரில் வாழும் பறவைகள் அழுதன; தேன் பொழியும் சோலைகள் அழுதன;
யானைகள் அழுதன; போர்க்களத்துக்குப் பொருந்திய
குதிரைகள் அழுதன...
நின்றும், இருந்தும், கிடந்தும் என்று எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்திருக்கும் இறைத்தத்துவம்; கம்பரசத்தில்
வழி நெடுகக் குவிந்திருக்கிறது..இந்த வாய்ப்பை
விட்டுவிட்டால் இனியொரு வாய்ப்பு எப்போது நமக்குக் கிடைக்கும்...
See More
 
தசாவதாரங்களில் இராமாவதாரத்துக்குத்தான் முக்கியத்துவம் அதிகம்..பெண்குலத்துக்கு இராமனைத்தான்
பிடிக்கும்..தான் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை மாறாதவன்..ஒரு சொல்..ஒரு வில்..ஒரு மனைவி..! என்னுடைய
கம்பராமாயணப் பதிவுகளைப் பக்திரசத்தோடு நான் எழுதவில்லை..பக்தி அதிகம் இருந்தால் அங்கே இலக்கியச்சுவை இருக்காது..
ஒரு மனிதன் எல்லா நற்குணங்களும் அமையப்பெற்று, வாழ்வில் உத்தம(புருஷோத்தம்) நிலையை எப்படி அடைகிறான் என்பதுதான் இராமகாதையின் சாராம்சம்..!...
மனிதன்கூட தெய்வமாகலாம் என்கிற கருத்தைதான் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்...

சிற்றன்னை(மாற்றாந்தாய்) என்பவளை, கொடுமைக்காரி என்று நாம் உருவகப்படுத்திக் கொண்டதற்குக் காரணமே கைகேயியின் கதாபாத்திரம்தான்..இந்த நாட்டில் கைகேயி என்று எவரும் பெயர் வைத்துக்கொண்டதாக நான் இதுவரை அறியவில்லை..அதைப்போலவே..சீதா, ஜானகி என்று பெயர் வைத்துக்கொண்டால் வாழ்நாளில் அவர்கள் மிகவும் துன்பப்பட நேரிடும் என்கிற ஒரு தவறான கருத்தும் இந்தச் சமுதாயத்தில் உலவிவருகிறது..
இராமனை நேரில் வரவழைத்து, தசரதனின் ஆணையை தானே அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று கைகேயி முடிவு செய்தாள்..தன்னுடைய அரண்மனைக்கு வந்த இராமனிடம், “உன்னுடைய தந்தை ஒரு விஷயம் உன்னிடம் சொல்ல விரும்பினார்..நான் அதைச் சொல்லலாமா..” என்று கேட்க..”அரசகட்டளையாக இருந்தாலும், உங்களுடைய கட்டளையாக இருந்தாலும் நான் அதை மறுப்பேனா..”என்றான் இராமன்..அரசகட்டளையைக் கேட்டதும் இராமனின் முகம் செந்தாமரை மலரை ஒத்திருந்ததாம்...உணர்வுகளின் வார்த்தைகளோடு விளையாடியிருக்கிறான் கம்பன்...
மன்னவன் பணி அன்றாகின் நும் பணி மறுப்பெனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்...
அயோத்தியா காண்டம்...கைகேயி சூழ்வினைப்படலம்.
உங்கள் கட்டளையை ஏற்று இப்பொழுதே கானகம் போகின்றேன் என்றான்.
எந்தச்சூழலிலும் கலங்காதவன் இராமன் என்று கோடிட்டுக் காண்பிக்கிறான் கம்பன்..தம்பி நாடாள்வது தமக்குப் பெருமை என்கிறான்..அப்படிச்சொல்லும்போது அவன் முகம் மலர்ந்த தாமரையைப்போல் இருக்கிறது..
பதவி ஆசைக்காக அண்ணன், தம்பி சண்டையிட்டுக் கொள்ளும் சமகால அரசியல் சூழலை நினைத்துக் கொள்கிறேன்..
See More
 
 
 
பலதாரமணம் என்பது அரசபரம்பரையில் பொதுவான வழக்கம்..பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்குத்தான்
மன்னர்கள் பலதாரங்களை மணந்தார்கள்..காதலில்,
கசிந்துருகி கல்யாணம் செய்து கொண்ட மன்னர்கள்
மிகவும் சொற்பமே...தம் வாழ்நாளில் பெரும்பகுதியைப்
போர்க்களத்தில் கழித்த மன்னர்கள் காதலுக்காக...
நேரம் ஒதுக்கியிருப்பார்களா...?! காதலிகளுக்கு
பட்டமகிஷி அந்தஸ்து கொடுத்திருப்பார்களா..
அரண்மனைப்பெண்டிர் வாழ்க்கையைப்
படிக்கும்போது மனசுக்கு வருத்தமாகயிருக்கும்...
எத்தனையோ சகலகலாவல்லிகளெல்லாம்
அந்தப்புரத்துக்குள்ளேயே அடிமையாய் மாண்டு
போயிருக்கிறார்கள்...

தசரதச்சக்கரவர்த்திக்கு மூன்று மனைவிகள்..(.வேடிக்கைக்கு
அறுபதாயிரம் மனைவிகள் என்று சொல்வார்கள் ..
நினைத்துப் பார்க்கும்போதே பயமாயிருக்கிறது..! )
கோசல நாட்டைச் சேர்ந்த கோசலை ( வடமொழியில்
கெளசல்யா) கேகய நாட்டின் இளவரசியான கைகேயி,
மற்றும் சுமத்திரை...கோசலைக்கு இராமனும்,
கைகேயிக்குப் பரதனும், சுமத்திரைக்கு இலக்குவனும்,
சத்ருகனும்..ஆக மொத்தம் நான்கு புதல்வர்கள்..
இரண்டாவது மனைவியான கைகேயியின் மீது
தசரதனுக்கு மிகுந்த அன்பு உண்டு..அவள் திறமைசாலி..
குதிரையேற்றத்திலும், இரதம் ஓட்டுவதிலும் தேர்ச்சி
பெற்றவள்..இராமன் மீது அவளுக்குப் பிரியம் உண்டு..
மந்தரையின் துர்போதனைகளால் அவள் மனம்
மாறினாள்..தசரதனிடம் அவளுக்கு வேண்டிய இரு
வரங்களைக் கேட்டபோது, மன்னனின் நிலை
எப்படியிருந்தது..கிட்டத்தட்ட நாற்பது பாடல்களில்
உணர்ச்சி ததும்ப எழுதியிருக்கிறான் கம்பன்...
கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன்
முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா
இடி ஏறுண்ட மால் வரைபோல் மண்ணிடை வீழ்ந்தான்..
அயோத்தியா காண்டம்...கைகேயி சூழ்வினைப்படலம்.
கொடியவளாகிய கைகேயியின் இந்த சொற்களைக்
கேட்டவுடன், இராமன் முடிசூட்டிக் கொள்ளாமல
வனவாசம் போவதைப் பார்க்க என் உயிர் நீங்கிவிடும்
என்று கூறி இடியால் தாக்குண்ட மலையைப் போல
மண்ணிலே விழுந்தான்..
இந்தப் பாடல்களைப் படிக்கும்போதே, அந்தக்
கதாப்பாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொண்டு
விட்டான் கம்பன் என்பது புலனாகிறது..
பூப்போன்ற இராமனுக்குப் புயல் வரும்
விபரீதம்...
காப்பியங்களாகட்டும்; திரைப்படங்களாகட்டும்..வில்லன், வில்லி கதாப்பாத்திரங்கள் இருந்தால்தான் சுவாரசியமாக இருக்கும்..வில்லனின் (போக்கிரி, துஷ்டன் என்று தமிழில் மொழிபெயர்த்து எழுதினால் அத்தனை நன்றாக இல்லை..சில ஆங்கிலப்பெயர்களை அப்படியே எழுதுவதுதான் அழகாக இருக்கிறது..கார் என்கிற வார்த்தைக்கு மகிழ்வுந்து என்று எழுதுவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை...! ) முக்கியத்துவத்தைப்
பொறுத்துத்தான் கதையில் திருப்புமுனை ஏற்படும்.
இராமாயணத்தில் முக்கிய வில்லிகளாக இரண்டுபேரைச்
சொல்லலாம். ஒன்று மந்தரை.....மற்றொன்று சூர்ப்பனகை..
இரண்டுபேருமே இராமனால் பாதிக்கப்பட்டவர்கள்..சமயம் பார்த்து இராமனைப் பழிவாங்கிவிட்டார்கள்..ஆக..
இராமகாதையில் திருப்புமுனை இந்த இரு பெண்கள்தான்...

மந்தரை..கூன்முதுகு உடையவள்..சிறுவயதில் இராமன்
விளையாடிக்கொண்டிருக்கும்போது, தன்னுடைய
வில்லில் களிமண் உருண்டையைப் பொருத்தி கூன்முதுகில்
விளையாட்டாக அடித்துவிட்டான்..அது அவளுக்கு மிகுந்த
வலியைக் கொடுத்தது...அப்போதிலிருந்தே அவளுக்கு
இராமனைக் கண்டாலே பிடிக்காது..
இராமனுக்கு முடிசூட்டப்போகிறார்கள் என்ற செய்தி
அறிந்ததும், கைகேயியிடம் சொல்லி எப்படியாவது
முடிசூட்டு விழாவை நிறுத்தவேண்டும் என்று முடிவு
செய்தாள்...கைகேயியின் அரண்மனைக்குச் சென்று
விஷயத்தைச் சொன்னாள்..கைகேயி மகிழ்ந்து
அவளுக்கொரு மாலையைப் பரிசாகக் கொடுத்தாள்.
மந்தரை அதைத் தூக்கி வீசியெறிந்தாள்..
துர்போதனைகள் மூலம் கைகேயியின் மனதை
மாற்றத் தொடங்கினாள்..
இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன்
பெரு வனத்திடை ஏழ் இரு பருவங்கள் பெயர்ந்து
திரிதரச் செய்தி ஒன்றினால் செழுநிலம் எல்லாம்
ஒரு வழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள்...
அயோத்தியா காண்டம்..மந்தரை சூழ்ச்சிப்படலம்.
மன்னன் முன்பே உனக்கு இரு வரங்கள் கொடுப்பதாகச்
சொல்லியிருக்கிறான்..அந்த வரங்களை இப்போது கேள்..
ஒரு வரத்தால் இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம்
செய்யவேண்டுமென்றும், இன்னொரு வரத்தால்
உன் மகன் பரதன் நாடாள வேண்டுமென்றும்
கேள் என்றாள்...
இந்தப்பாடலைப் படிக்கும்போதே, கூனியைக்
கண்டதுண்டமாக வெட்டிப்போடவேண்டும் என்று
மனம் பரபரக்கிறது..படிப்பவர்கள் மனதைக்
கொந்தளிக்கச் செய்கிறது..அதுதான் கம்பன் தமிழின் வலிமை...
வாள் முனையை விட பேனா( எழுத்து ) முனைக்குக்
கூர்மை அதிகம் என்று சும்மாவா சொன்னார்கள்..
See More
 
 
 
முடியாட்சியில், மன்னனுக்குப்பிறகு மூத்தமகன் அரியணை
ஏறுவதுதான் பொதுவான மரபு..மூத்தமகன் இல்லையென்றால், இளையமகன்...மன்னனுக்கு வாரிசு
இல்லையென்றால், கூடப்பிறந்த சகோதரன்..சகோதரனின் மகன், மகன் வயிற்றுப்பேரன்..மகள் வயிற்றுப்பேரன்..இந்த முறைகளில் கூட ஆட்சி நடந்திருக்கிறது..தமிழர் அரசபரம்பரையில் மருமகன் ஆட்சி செய்ததாக, நான் இதுவரைக் கேள்விப்பட்டதில்லை...
பிணிஇன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்...
அணிஎன்ப நாட்டிற்கு இவ் ஐந்து...என்பது வள்ளுவன் வாக்கு..

நோய் இல்லாதிருத்தல்,செல்வம், விளைபொருள் வளம்,
இன்பவாழ்வு,நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு..
அப்படிப்பட்ட அயோத்திநாட்டின் மன்னன் தசரதன்,தன்னுடைய வயோதிகநிலையைக் கருத்தில் கொண்டு, மூத்தமகனான இராமனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு; மனைவிகளோடு வனம் சென்று வானப்பிரஸ்தம் என்கிற வாழ்க்கைமுறையை மேற்கொள்ள நினைக்கிறான்..அமைச்சர்களோடும், குலகுருவான
வசிஷ்டரோடும் கலந்தாலோசிக்கிறான்..இராமனை அழைத்து அவனிடம் தன் முடிவைச் சொல்கிறான்..
மன்னனின் பெருமையும், தந்தையின் கனிவும் ஒருங்கே அமைந்த கம்பனின் பாடல்...
அனையது ஆதலின் அருந்துயர்ப் பெரும் பரம் அரசன்
வினையின் என்வயின் வைத்தனன் எனக் கொளவேண்டா
புனையும் மாமுடி புனைந்து இந்த நல் அறம் புரக்க
நினையல் வேண்டும் யான் நின்வயின் பெறுவது ஈது என்றான்.
அயோத்தியா காண்டம்..மந்திரப்படலம்.
அரிய துன்பத்தைத் தரும் பெரிய அரசியல் பாரத்தைத் தந்திரமாகத் தந்தை என்மீது சுமத்தினான் என்று நினைக்காதே..பெருமை பொருந்திய இந்த மகுடத்தை அணிந்துகொண்டு இந்த அரசியல் அறத்தை நீ காக்க வேண்டும்..நான் உன்னிடம் வேண்டுவது இதுவே...என்றான் தசரதன்...
அயோத்தியா என்றாலே எப்போதும் இராமன்தான் நினைவுக்கு வருவான்..இப்போதெல்லாம் பாபரும் கூடவே சேர்ந்து நினைவில் வருகிறார்...
See More
 
பண்டையத் தமிழர் நாகரிகம், வீரம் விளைந்த மண்ணுக்குச்
சொந்தம்...தமிழ்தொல்குடி விளையாடிய விளையாட்டுகளில்
கூட வீரம் கலந்திருந்தது..ஜல்லிக்கட்டு, மல்யுத்தம், குதிரை
யேற்றம், வாள் மற்றும் வில் பயிற்சி, இரதம் ஓட்டுதல்...இப்படி எல்லாமுமே வீரத்தோடு சம்பந்தப்பட்டது..
...
தமிழ்ப்பெண், வீரனைத்தான் காதலித்தாள்..தன் பெண்ணுக்குக் கணவனாக வரப்போகிறவன் வீரனாக
இருக்கவேண்டுமென்று ஒவ்வொரு தந்தையும் நினைத்தான்..
இன்றைய காலகட்டத்தில், பெண்கள் மீதான வன்முறைகள்
அதிகமாக இருக்கிறது...தற்காப்புக்கலைகள் கற்றுக்
கொள்வதில் பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
பெண் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளவேண்டிய
சூழலில் நாமிருக்கிறோம்..
சிவனின் சிலையை(வில்) கையில் எடுத்து எவனொருவன்
நாணேற்றுகிறானோ, அவனுக்குத்தான் என் மகளைத்
திருமணம் செய்து கொடுப்பேன் என்று மிதிலை அரசன்
ஜனகன் சூளுரைத்திருக்கிறான்...இந்த மரவுரி தரித்த
இளைஞனாவது அந்தச் சபதத்தை நிறைவேற்றமாட்டானா...?!
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்...
பாலகாண்டம்--கார்முகப் படலம்.
அவையில் இருந்தவர்கள் இமைக்காத விழிகளோடு
காத்திருந்தனர்..வீரன் வில்லை எடுக்கிறான்..வில்லை
எடுத்ததற்கும், ஒடித்ததற்கும் இடையே நிகழ்ந்த செயல்களை
ஒருவரும் அறியார்...வில் முறிந்த சத்தத்தை மட்டுமே
கேட்டார்கள்...
தமிழ்மொழி ஓசைநயமிக்க மொழி...வெறும் வார்த்தைகளின்
மூலமாகவே ஓசையை நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும்.
இந்தப்பாடலைப் படிக்கும்போதே வில் முறிகிற சப்தம்
காட்சிபூர்வமாக நம் மனதில் தோன்றுகிறது..அதுதான்
கம்பனின் கவித்துவம்..
தமிழ்த்திரைப்படங்களில் வரும் கதாநாயகிகள்
ரெளடிகளைக் காதலிப்பதை வீரம், என்று நீங்கள்
பொருள் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல...
See More

 

  •  
காதல் பிசாசே” என்றொரு தமிழ்த் திரைப்பாடல் இருக்கிறது..
கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கும்...பிசாசு உடம்புக்குள்
புகுந்துவிட்டால் என்னவெல்லாம் செய்யும்..?!
காதல் வயப்பட்ட மனசும் அப்படித்தான்...சொல்லவும்
முடியாமல், மெல்லவும் முடியாமல் அது ஒரு மென்சோகம்...!...
‘நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்யவோ
தாம்காதல் கொள்ளாக் கடை...” என்பான் வள்ளுவன்.
நாம் ஒருவரை நேசிப்பதும், அவரால் நாம் நேசிக்கப்படுவதும்
வாழ்நாள் கொடுப்பினை...!
சீதையே ஆனாலும் அவளும் ஒரு பெண்தானே...இராமனைக்
கன்னிமாடத்திலிருந்து, நோக்கிய அந்த நிமிஷத்திலிருந்து
அவளால் இயல்பாக இருக்கமுடியவில்லை...சீதை காதலில்
உருகுகிற பலபாடல்களைக் கம்பன் நமக்குக் கொடுத்து
இருக்கிறான்..அப்படியொரு பாடல் இது..
வெளிநின்றவரோ போய் மறைந்தார்; விலக்க ஒருவர்தமைக் காணேன்
எளியன் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருளூடே
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இம்மாயம்
உரைத்தாரோ
அளியென் செய்த தீவினையே அன்றில் ஆகி வந்தாயோ...
பாலகண்டம்..மிதிலைப்படலம்.
அன்பின் பிரிவாற்றாது,தன் இணையைக்கூவியழைக்கும்
அன்றில் என்கிற பறவையைப்போல, நானும் இராமனை
எண்ணி உருகுகிறேன்...நான் என்ன பாவம் செய்தேன்..எளிய
பெண் என்றும் பாராமல் மன்மதன் , பகலில் வராமல் இரவு நேரத்தில் வந்து, என்மீது காதல் கணைத் தொடுக்கிறான்...
இராமன் இருந்த நிலையையும் இங்கே சொல்லியாகவேண்டும்...உதாரணத்திற்கு ஒரு பாடல்...
விண்ணின் நீங்கிய மின் உரு இம்முறை
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்..
பாலகாண்டம்..மிதிலைப்படலம்
மேகத்தில் ஒளிரும் மின்னலே பெண்ணுருக்கொண்டு
வந்ததோ என்று மயங்கினான்..அவன் கண்களில்
அவளைத்தவிர வேறெந்தப் பொருளுமே தோன்றவில்லை...
எந்தக்காலத்திலும் காதலைப்பற்றி எழுதுவதற்கு கவிஞர்கள்
சளைப்பதேயில்லை...அதிலும் கம்பன் காப்பியக்கவிஞன்..
கரும்பு தின்னக் கூலி வேண்டுமா கவிச்சக்கரவர்த்திக்கு..
See More
Like · ·
ஒரு ஆண் சக ஆணை நேசிப்பதும், பெண் சக பெண்ணை நேசிப்பதுமான ஒரு விஷயத்தை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..பெண் ஆணை நேசிப்பதும், ஆண் பெண்ணை நேசிப்பதும்தான் உலகநியதி..வாழ்வியல்முறை...இதைத்தான் இறைவனே அர்த்தநாரீஸ்வரனாக இருந்து வெளிப்படுத்துகிறான்..ஒரே நேர்க்கோடான வாழ்க்கையில் தடம்புரண்டு, எதிர்மறையான வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதால் யாருக்கு என்ன சந்தோஷம் கிடைத்துவிடப் போகிறது..சமூகம் அவர்களைப் புரியாதப்புதிராகத்தான் பார்க்கிறது..
மிதிலைநகரத்துத் தெருக்களில் நடந்துபோகும...் இராமனைப் பார்க்கும் அந்நகரத்துப்பெண்கள் எப்படியெல்லாம் அவனை ரசிக்கிறார்கள்...இதை எழுதும்போது எனக்கு சிரிப்பு வருகிறது..இந்தப்பெண்களுக்கு வேறு வேலையில்லையா...தெருவில் போகிற ஆணை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்களா...
பெயர் தெரியாத எவனோ ஒருவன் தெருவைக் கடந்துபோனால் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள்...அங்கே நடந்து போவது யார்..

.நின்றும், இருந்தும், கிடந்தும், என்றும் நினைப்பது அவனையல்லவா...அவனை நினப்பதற்கென்றே இந்த ஜென்மம் எடுத்திருக்கிறோம்...கரும்பு போல இனிக்க
இனிக்க எழுதியிருக்கிறான் குறும்புக்கார கவி...!
தோள் கண்டார் தோளே கண்டார்; தொடுகழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னார் உருவு கண்டாரை ஒத்தார்..
பாலகண்டம்...மிதிலைப்படலம்.
ஒவ்வொரு சமயத்தினருக்கும் ஒரு உருவவழிபாடு இருப்பதைப்போல, மிதிலைநகரத்துப் பெண்கள் இராமனைத் தனித்தனி உருவமாக நினைவில் பதிந்து கொண்டார்கள்..பரந்த தோளைப் பார்த்தவர்கள் தோளை மட்டும் நினைத்துக்கொண்டார்கள்..தாமரைமலர்ப் பாதங்களைக் கண்டவர்கள், பாதங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டார்கள்..நீண்ட கைகளைக் கண்டவர்கள்..கைகளை மட்டும் நினைவு செய்தார்கள்..வாள் போன்ற கூரிய விழிகளைக் கொண்ட அந்தப் பெண்கள் யாருமே இராமனின் முழு வடிவத்தை மனதில் நிறுத்திக் கொள்ளவில்லை..
.அவசரகதியில் பார்த்து ரசித்தார்கள் என்று நகைச்சுவையாக நாம் எடுத்துக்கொண்டாலும், அந்த வரிகளின் ஊடே ஒரு மறைப்பொருள் வைத்துப் பாடியிருக்கிறான் கம்பன்..
இராமனை, ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை, செங்கண்மாலை,
ஒப்பில்லாத அப்பனை...முழு வடிவத்துடன் நினைத்து, ரசித்து,
வாழ்நாள் முழுக்க அவனை உரிமையோடு கொண்டாடுவதற்கு ஒருத்தி வரப்போகிறாள்..
மிதிலாநகரத்து அரண்மனைத்தெருவில், கன்னிமாடத்தில்
அவன் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள்..
ஆகவே பெண்களே...இராமனைக் கண்ணால் கண்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல்
சொல்லிவிட்டான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்...
See More
Like · ·
பொதுவாக நகர்ப்புறச்சாலைகளில்,தெருக்களில் யார் நடந்து போகிறார்கள் என்று அத்தனை உன்னிப்பாக நாம் கவனிப்பதில்லை...கிராமங்களில் நிலைமையே வேறு..தெருவை யார் கடந்து சென்றாலும், எந்த வீட்டுக்குப் போகிறார்கள் என்கிற விபரமெல்லாம் விரல்நுனியில் வைத்திருப்பார்கள்...கிராமத்தான் என்று நாம் கிண்டலடிப்போம்..ஆனால் அவர்களின் நுட்பமான அறிவு நமக்குக் கிடையாது..
மிதிலைநகரத்துத் தெருக்களில் இரண்டு இளைஞர்கள் மரவுரி தரித்து, முனிவரொருவர் கூட வர நடந்து செல்கிறார்கள்..அவர்கள் சகோதரர்களாக இருப்பார்களோ,... சிறிது உயரமாக இருப்பவன்..அண்ணனோ..இவர்கள் யார், எங்கிருந்து வருகிறார்கள்..அரசகுலமோ, அப்படியானால் எந்த வம்சம்..சூரிய வம்சமா...சந்திர வம்சமா..கூடிக்கூடிப் பேசிக்கொள்கிறார்கள்...ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறார்கள்..வார்த்தைப்பந்தல் போடுகிறான் கம்பன்..
தயரதன் புதல்வன் என்பார்; தாமரைக்கண்ணன் என்பார்;
புயல் இவன் மேனி என்பார்; பூவையே பொருவும் என்பார்;
மயல் உடைத்து உலகம் என்பார்; மானிடன் அல்லன் என்பார்;
கயல்பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார்..
பாலகாண்டம்..மிதிலைப்படலம்.
கடைசிவரிக்கு விரிவாகப் பொருள் சொல்கிறேன்..
வைணவர்கள் தம்வாழ்நாளில் தரிசிக்க வேண்டிய மிக முக்கியமான விண்ணகரங்களை(பெருமாள் கோவில்கள்) நூற்றியெட்டு திவ்யதேசங்கள் என்பார்கள்..அதில் நூற்றியாறு இந்த பூலோகத்தில்..அதுவும் பரத கண்டத்தில்தான் இருக்கின்றன..மீதி இரண்டு..சூட்சும உலகத்தில்..திருப்பாற்கடல் மற்றும் திருப்பரமபதம்..பாற்கடல் பரந்தாமனின் வசிப்பிடத்தைக் குறிக்கிறது..பரமபதம் சரணாகதித் தத்துவத்தைக் குறிக்கிறது..சரி..பாற்கடல் எப்படியிருக்குமென்று நமக்கு எப்படித் தெரியும்..? கம்பனிடத்தில் நாம் கேள்வி கேட்க மாட்டோமா...?!
கம்பன் சோழநாட்டுக்கவி...கெட்டிக்காரத்தனம் கூடவே பிறந்த குணம்..கடல்னு சொன்னால் அங்கே கயல்மீன்கள் துள்ளி விளையாடும்..அது வங்கக்கடலாயிருந்தாலென்ன...பாற்கடலாயிருந்தாலென்ன..எல்லாக்கடலும் ஒன்றுதான் கம்பனுக்கு...
அப்படிப்போடு..கம்பன் கிட்டேயே லாஜிக் பத்தி கேள்வி கேக்கறயா நீ....
இன்றைய கணினியுகத்தில் பொழுது போக்குவதற்கு ஏராளமான சாதனங்கள் உள்ளன..என்னுடைய பள்ளிப்பருவத்தில் நான் விளையாடிய விளையாட்டுக்கள் இப்பொழுது வழக்கொழிந்து போய்விட்டன..பாண்டியாட்டம், ஏழுகல்லு, தாயக்கட்டம், பரமபதம், பல்லாங்குழி, கல்லா மண்ணா, கிட்டிப்புள், கண்ணாமூச்சி. பூத்தொடுத்தல்...சொல்லிக்கொண்டே போகலாம்...தென்னைமட்டையில் கிரிக்கெட்பேட் செய்து விளையாடுவோம்..தாயக்கட்டம் விளையாடும்போது காயை யாராவது வெட்டிவிட்டால் அடிதடி சண்டையே நடக்கும்..பாட்டிதான் சண்டையை விலக்கி விடுவார்..விடுமுறைநா...ட்களில் வலையப்பேட்டை பாட்டிவீடு திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்..அப்போதெல்லாம் குளிர்சாதன வசதி கிடையாது...இளநீர்க்காய்களைப் பறித்து கிணற்றுக்குள் போட்டுவிடுவோம்..வேண்டும்போது, கயிறு மூலம் வாளியைக் கிணற்றில் இறக்கி; காய்களை எடுப்போம்..ஜில்ஜில் இளநீர்..என்னைபோன்ற புத்தகப்புழுக்களுக்கு பாட்டிவீட்டுக்குள்ளேயே நூலகம் உண்டு..பொழுது போவதே தெரியாது..இன்றைய குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுகள் எதுவுமே தெரியாது..கிராமப்புறங்களில் ஏதோ கொஞ்சம்பேர் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்...
இராமாயணக்காலத்தில் அயோத்திமாநகர் மக்கள் எப்படியெல்லாம் பொழுது போக்கினார்கள்..பெரிய பட்டியலே இருக்கிறது கம்பனிடம்..உதாரணத்துக்கு ஒரு பாட்டை மட்டும் இங்கே சொல்கிறேன்...
ஊடவும்,கூடவும் உயிரின் இன்னிசை
பாடவும், விறலியர் பாடல் கேட்கவும்,
ஆடவும் அகன் புனல் ஆடி ஆய்மலர்ச்
சூடவும் பொழுதுபோம் சிலர்க்கு அத்தொல்நகர்..
பாலகண்டம்..நகர்ப்புறப்படலம்
வால்மீகி ராமாயணத்தை மூலநூலாகக் கொண்டு, கம்பன் இராமாயணத்தை எழுதியிருந்தாலும், தமிழின் தனித்தன்மையை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை..மேலே குறிப்பிட்ட இந்தப்பாடலிலும் மருதநிலத்துக்கே உரிய மண்வாசனை வார்த்தைகளில் வீசுவது தெரியும்...
See More
Like · ·
தமிழுக்கு அழகு சேர்ப்பது “ழ’கரம்..ஒருவர் “ழ”கரத்தை எத்துணை அழகாக உச்சரிக்கிறார் என்பதைப் பொறுத்து, தமிழ்மொழி மேல் அவருக்கிருக்கிற ஈர்ப்பை உணர்ந்து கொள்ளமுடியும்..
கவிச்சக்கரவர்த்தி கம்பன் முழுவதும் ழகரம் வருமாறு விருத்தப்பாவில் அமைத்திருக்கிறான்...
குழலிசை மடந்தையர் குதலை கோதையர்...
மழலைஅம் குழலிசை மகரயாழிசை
எழிலிசை மடந்தையர் இன்சொல் இன்னிசை
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டிசை.

பாலகாண்டம்---நகர்ப்படலம்.
கம்பனுக்கு முன்னோடியான ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோதைநாச்சியார், தன்னுடைய நாச்சியார் திருமொழியில் ழகரம் அமைத்து கவிமழை பொழிந்திருக்கிறாள்..
எழிலுடை அம்மனைமீர்; என்னரங்கத்து இன்னமுதர்
குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில்
எழுகமலப்பூவழகர் எம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினாரே...
நாச்சியார் திருமொழியைப் பற்றி விரிவாகப் பிறகு எழுதுகிறேன்..
கம்பராமாயணத்தைப் பக்திக்காப்பியம் என்று நினைத்துக்கொண்டு படிக்கவேண்டும் என்கிற அவசியம் எதுவுமில்லை..கம்பனின் மொழி ஆளுமையைக் கண்டு, ரசித்து, வியக்கலாம்...
See More

Like · ·
  •  



பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழியில் கண்டு...பாசம் படத்தில்(எம்.ஜி.ஆர். சரோஜாதேவி) கண்ணதாசன் எழுதிய பாடல் இது..இந்தப்பாடல் கம்பராமாயணத்தின் பாதிப்பில் எழுதிய பாட்டு என்று பேட்டி ஒன்றில் கண்ணதாசன் கூறியிருந்தார்..அந்தப்பாடல் என்னவாகயிருக்கும்..? கம்பராமாயணத்தில் தேடிக்கண்டுபிடித்தேன்..
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனியிந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவுவதெல்லாம்
மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்...
கைவண்ணம் அங்கே கண்டேன்; கால்வண்ணம் இங்கே கண்டேன்..
...பால கண்டம்...அகலிகைப்படலம்..


See More






 

  •