Tuesday, September 1, 2015


இராமபிரான் கடற்கரையில் நின்று, இனி ஆக வேண்டிய காரியங்களை ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில்; இலங்கையில் அநுமன் எரியூட்டிச் சென்றபின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்

 

அநுமனால் அழிவுண்ட இலங்கையைத் தேவதச்சன் மயனைக் கொண்டு, இராவணன் புதுப்பிக்கச் செய்தான்

அரசவையில் அமர்ந்து, ” என் மாட்சி அனைத்தும் ஓர் குரங்கினால் மறுகி மாண்டதுஇப்பொன்னகர் அழிந்து; என் மகன், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் இறந்துபட்டனர்கிணற்றில் நீருக்குப்பதில் உதிரம் ஊறுகின்றது.. பொன்னகரில் இடப்பட்ட அழல்ஆறு இன்னமும் தணியவில்லைஅந்தக் குரங்கை அழித்தொழிக்க முடியவில்லையேஇனி நாம் செய்து முடிக்கக்கூடிய வினை யாதுள்ளது….? “ என்று வினவினான்.

 

சேனைக்காவலனான பிரகதத்தன் எழுந்து வணங்கி, “ அரசேஉன்னிடம் சொல்லவேண்டிய பொருள் ஒன்று இருக்கின்றது.. ஒருங்கு கேள் எனா…” என்றான்

வேந்தேமனிதர்க்கு வஞ்சனை செய்து, ஒளிபொருந்திய நெற்றியையும், செம்பஞ்சு போன்ற மென்பாதங்களையுடைய, மயில் போன்ற சாயலுடையவளான சீதையைக் கைப்பற்றுதல், “ வாணுதற் பஞ்சன மெல்லடி மயிலைப் பற்றுதல் வீரர் தொழிலன்று….” என்று நான் முன்னரே உமக்கு அறிவித்தேன்அந்த வார்த்தையை நீ உணரவேயில்லைகரன் முதலான அரக்கரை அழித்தவரும், உன் தங்கை மூக்கரிந்த வீரருமான இராமஇலக்குவரைக் கொல்லாமல் விட்டிருக்கின்ற நீஇப்போது மனம் தளர்கின்றாய் போலும்..”

 

வண்டுகள் விரும்பியமர்கின்ற மாலையைத் தரித்தவனேமூன்று உலகும் உற்ற நீஒரு குரங்கிற்காக நடந்ததையெண்ணி வருத்தப்படலாமாஅந்தக் குரங்கை ஏவியவர்களின் உயிரைக் குடித்து, நம்மனத்துயர் ஆற்றுவோம்…” என்று இராவணன் மனதில் படும்படி சொன்னான்

 

பிரகதத்தனைத் தொடர்ந்து, உபதலைவர்களான மகோதரன், வச்சிரதந்தன், துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்துரு, யக்ஞஹா, தூமிராட்சன் போன்றோரும் தம் கருத்தைக் கூறினர்இதன்பிறகு, இராவணனின் தம்பியான கும்பகர்ணன் பேசத் தொடங்கினான்

 

நான் உன் தம்பி.. உன் நன்மையையே கருதுவேன் என்ற திடமான எண்ணம் உனக்கு என்பால் இருக்குமானால், நான் சில அறிவுரைகளைக் கூறுகிறேன்….”

 

பிரமதேவனை ஆதியாகக் கொண்ட குலத்திலே பிறந்து, தன்னிகரற்றவனாக உள்ளாய்ஆயிரம் மறைபொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்… “ வேறொரு குலத்தான் தேவியை நயந்து சிறைவைத்த செயனன்றோ…” உன் பெருமையைக் குலைத்தது….? நெருப்பைத் தீண்டினால், அது எரித்துவிடுமே என்று எண்ணாது மயங்கினாய்ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதை நீ அறியவில்லையா…. இப்பழியைக் காட்டிலும் வேறுமோர் பழியும் உண்டா…? இத்தனை மனைவியர் உன் ஒருபார்வைக்குக் காத்துக் கொண்டிருக்கும்போது, பிறன்மனை நோக்குதல் தகுமோ…? என்று தவமகளைச் சிறை வைத்தாயோ; அன்றே அரக்கர் புகழ் அழியத் தொடங்கிவிட்டது….”

 

ஆய்மறை துறந்து சிறை வைத்தாய்…” என்கிறான் கம்பன்நான்கு வேதங்களையும் கற்றவன் இலங்கேஸ்வரன்அப்படிப்பட்ட வேதநெறியைக் கைவிட்டு, திருமகளாம் பிராட்டியைச் சிறையெடுத்ததன் மூலம், தான் பிறந்த குலத்துக்கு மிகப்பெரிய அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டான்

 

எம்பிராட்டியை, இராவணன் மனச்சிறையில் வைத்ததோடு மட்டுமல்லாமல், பர்ணசாலையோடு பெயர்த்தெடுத்துவந்து அசோகவனத்திலும் சிறைவைத்தான்..

 

இராவணன் இதயமாம் சிறையிற் சுரந்த காதல்; இராமபிரானின் கோதண்டத்திலிருந்து புறப்படும் கணையாக, அவன் ஆவி துறக்கக் காரணமாயிருந்ததுஅதைக் காதலென்று சொல்வதே காப்பியப் பிழை…!

ஒருத்தன் மனையிற்றாழ் பொன்னடி தொழத் தொழப் பேணுவது காமம்…” என்கிறான் கம்பன்…!

 

நெஞ்சூ டுருவ வேவுண்டு

நிலையும் தளர்ந்து நைவேனை

அஞ்சே லென்னான் அவனொருவன்

அவன்மார் வணிந்த வனமாலை

வஞ்சி யாதே தருமாகில்

மார்பில் கொணர்ந்து புரட்டீரே….”

கோதை நாச்சியார்நாச்சியார் திருமொழி….

 

 

 

No comments:

Post a Comment