பால் வண்ணம் பருவம் கண்டு, வேல் வண்ணம் விழியில் கண்டு...பாசம் படத்தில்(எம்.ஜி.ஆர். சரோஜாதேவி) கண்ணதாசன் எழுதிய பாடல் இது..இந்தப்பாடல் கம்பராமாயணத்தின் பாதிப்பில் எழுதிய பாட்டு என்று பேட்டி ஒன்றில் கண்ணதாசன் கூறியிருந்தார்..அந்தப்பாடல் என்னவாகயிருக்கும்..? கம்பராமாயணத்தில் தேடிக்கண்டுபிடித்தேன்..
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனியிந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவுவதெல்லாம்
மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்...
கைவண்ணம் அங்கே கண்டேன்; கால்வண்ணம் இங்கே கண்டேன்..
...பால கண்டம்...அகலிகைப்படலம்..
இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனியிந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவுவதெல்லாம்
மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்...
கைவண்ணம் அங்கே கண்டேன்; கால்வண்ணம் இங்கே கண்டேன்..
...பால கண்டம்...அகலிகைப்படலம்..
தாடகை என்கிற அரக்கியை உன் இராமபாணத்தினால் கொன்றபோது, உன் கைவண்ணத்தை அங்கே கண்டேன்..உன் கால் பட்டு அகலிகை உயிர்த்தெழுந்தபோது, உன் கால்வண்ணத்தை இங்கே கண்டேன்...
விளையாட்டாகத் தேட ஆரம்பித்து, முனைப்போடு கம்பராமாயணத்தைப் படிக்க நேர்ந்ததில் கம்பனின் கவிநயத்தில் மூழ்கிப்போய்விட்டேன்..நான் ரசித்துப் பருகிய கம்பரசத்தில், சிலதுளிகளை உங்களோடு இனிவரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்...
See Moreவிளையாட்டாகத் தேட ஆரம்பித்து, முனைப்போடு கம்பராமாயணத்தைப் படிக்க நேர்ந்ததில் கம்பனின் கவிநயத்தில் மூழ்கிப்போய்விட்டேன்..நான் ரசித்துப் பருகிய கம்பரசத்தில், சிலதுளிகளை உங்களோடு இனிவரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்...
No comments:
Post a Comment